இந்தப் பழமும் புளிக்கும்.. 14 மாதங்கள் அந்தரங்க இடத்தில் தயாரிப்பாளரால் சித்ரவதை அனுபவித்த வாசனை நடிகை

தமிழ் சினிமாவில் வந்த புதிதில் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டார் நடிகை. அதிலும் பல வருடங்களாக முன்னணியில் இருக்கும் ஹீரோக்களின் படத்தில் தலைகாட்டியவர் அந்த நடிகை, வாசனை சம்பந்தப்பட்ட பெயரைக் கொண்ட அந்த நடிகை ஒரு தயாரிப்பாளருடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

தமிழில் ஐந்து படங்கள் மட்டுமே நடித்துள்ளார். அரசியல் சம்பந்தப்பட்ட பிரபல காமெடி நடிகர் ஒருவரின் படத்தில் நடித்ததன் மூலம் நடிகைக்கு பெரிய பெயர் கிடைத்தது. ஐந்து படங்களுக்கு பின் ஹிந்தி பக்கம் இப்பொழுது நடித்து வருகிறார்.

பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்தார் நடிகை. ஆரம்பத்தில் அவர்களது காதல் கொடி கட்டி பறந்தது. அதன் பின் 14 மாதங்கள் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருவரும் இருந்துள்ளனர். ஜரூராக போய்க்கொண்டிருந்த நடிகையின் வாழ்க்கையில் திடீரென இடி விழத் தொடங்கியது.

இந்தப் பழமும் புளிக்கும் என்பது போல அவர்களது 14 மாதங்கள் ரகசிய தொடர்பு கசக்கத் தொடங்கியது. தயாரிப்பாளருக்கு பல இளம் பெண்களுடன் தொடர்பு ஏற்படவே நடிகை மீதான நாட்டம் குறைந்தது. புதிது, புதிதாக அனுபவிக்க தொடங்கிய அந்த தயாரிப்பாளர் நடிகையை சித்திரவதை பண்ணத் தொடங்கினார்.

தற்போது அவரை விட்டு முற்றிலுமாக வெளியே வந்த நடிகை புகார் மேல், புகார் கூறி வருகிறார். நாங்கள் சேர்ந்து வாழ்ந்த அந்த 14 மாதங்கள் நான் நரக வேதனையை அனுபவித்தேன். இந்த மாதிரி ஒரு நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று கதறி பேட்டி கொடுத்து வருகிறார்.

தினமும் இரவில் மது குடித்து விட்டு வந்து அந்தரங்க உறுப்பில் அடிப்பதும், கடிப்பதுமாய் நரக சித்திரவதையை கொடுத்துள்ளார் அந்த தயாரிப்பாளர். இந்த கடினமான சமயத்தில் இருந்து தற்போது விலகி விட்டதாகவும் இனிமேலும் அந்த தயாரிப்பாளரிடம் எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள். “அவர் ஒரு சைக்கோ” என்று செல்லும் இடமெல்லாம் புகழ்பாடி வருகிறார் நடிகை.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →